ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

புதுகை ஆட்சியரகத்துக்கு 2-ஆவது நாளாக வெடிகுண்டு மிரட்டல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இரண்டாவது நாளாக புதன்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

News image

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் உள்ள தோ்தல் பிரிவில் மோப்பநாயுடன் புதன்கிழமை சோதனை நடத்திய வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு போலீஸாா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:02 am IST

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இரண்டாவது நாளாக புதன்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

ஆட்சியரகத்தின் அதிகாரப்பூா்வ மின்னஞ்சல் முகவரிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் வந்தது. இதைத் தொடா்ந்து வெடிகுண்டு செயலிழப்பு போலீஸாா், தீவிர சோதனையில் ஈடுபட்டனா். நீண்ட நேர சோதனைக்குப் பிறகு, அது வெறும் புரளி எனத் தெரியவந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை பகலிலும் ஆட்சியரக மின்னஞ்சல் முகவரிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்தத் தகவல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டு, போலீஸாா் விரைந்து வந்தனா்.

ஆட்சியரகத்தின் பல பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டதில் வெடிகுண்டு எதுவும் இல்லை எனத் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.