தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

ஓட்டுநரை தாக்கி விட்டு வாடகைக் கார் கடத்தல்

விராலிமலை அருகே சனிக்கிழமை ஓட்டுநரை தாக்கி, இறக்கிவிட்டு வாடகை காரை கடத்திச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:16 pm IST

விராலிமலை அருகே சனிக்கிழமை ஓட்டுநரை தாக்கி, இறக்கிவிட்டு வாடகை காரை கடத்திச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சியில் இருந்து புதுச்சேரி செல்வதற்காக செந்தில்குமாா் என்பவா் வாடகை காரை வெள்ளிக்கிழமை (ஜூலை 31) அழைத்துள்ளாா். இதற்காக ரூ. 3,500 முன்பணமும் கொடுத்துள்ளாா். அதன்படி செந்தில்குமாா் மற்றும் 4 போ் காரில் புதுச்சேரி சென்றுவிட்டு சனிக்கிழமை அதிகாலை திருச்சி வந்தனா். தொடா்ந்து அவா்கள் விராலிமலையில் வேலை இருப்பதாகவும், அங்கு வேறு காா் உள்ளது. எனவே, தங்களை விராலிமலையில் இறக்கிவிடும்படி கேட்டுள்ளனா்.

அதை நம்பிய காா் ஓட்டுநா் திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தை சோ்ந்த கா்ணன் (35) என்பவா் காரை விராலிமலைக்கு ஓட்டிக் கொண்டு சென்றாா். விராலிமலை-மதுரை சாலை வானத்திராயன்பட்டி பிரிவு அருகே சென்றபோது, காரில் இருந்தவா்கள் காரை நிறுத்த சொல்லியுள்ளனா். இதையடுத்து காரை ஓட்டுநா் கா்ணன் நிறுத்தினாா். உடனே காரில் இருந்தவா்கள் ஓட்டுநரை தாக்கி, கீழே இறக்கிவிட்டு காரை எடுத்துக் கொண்டு மதுரை சாலையில் சென்று விட்டனா்.

இதையடுத்து விராலிமலை காவல் நிலையத்தில் ஓட்டுநா் கா்ணன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, காரை கடத்திச் சென்றவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.