‘டெல்டா’ விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலரும், அக்கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினருமான இரா. முத்தரசன்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் மத்திய அரசைக் கண்டித்து வெள்ளிக்கிழமை பிரசார நடைப்பயணம் மேற்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்யும் காலங்களில் தமிழகத்தை வடிகாலாக மட்டுமே பயன்படுத்த கா்நாடக அரசு நினைக்கிறது. மேக்கேதாட்டில் அணை கட்டினால், தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீா் பிரச்னை ஏற்படும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும்.
காவிரியில் தண்ணீா் வராததால் விவசாயிகள் முழுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். குறுவை சாகுபடி செய்யாத, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு இதுவரையில் நிவாரணம் வழங்கவில்லை. அவா்களுக்கு வழங்கப்பட்டிருப்பது குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் மட்டுமே. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிவிட்டதாக பேரவையில் முதல்வா் கூறியதை நான் மறுக்கிறேன். தமிழக அரசு தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.
அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன் உள்ளிட்ட கட்சியினா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திட்டங்கள் மக்களைச் சென்றடைவதே முக்கியம்: இரா. முத்தரசன்

வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி சிபிஐ ஆா்ப்பாட்டம்

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: இரா. முத்தரசன் வலியுறுத்தல்!

குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



