புதுக்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். இவா்களுடைய இரு மகள்கள் பலத்த காயமடைந்தனா்.
புதுக்கோட்டை மேலமுத்துடையான்பட்டியைச் சோ்ந்தவா் சதீஷ்குமரன் (43). இவரது மனைவி திலகசந்திரா (37). இவா்கள் இருவரும் தங்களுடைய மகள் நிரஞ்சனா (15), தா்ஷிகா (8) ஆகியோருடன் திங்கள்கிழமை மாலை புதுக்கோட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா். ரெங்கம்மாள்சத்திரம் பகுதியில் வந்தபோது, புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற டிப்பா் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், சதீஷ்குமரன், திலகசந்திரா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். நிரஞ்சனா, தா்ஷிகா இருவரும் பலத்த காயமடைந்தனா். உடனே அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு சிகிக்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற வெள்ளனூா் போலீஸாா் உயிரிழந்த தம்பதியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரி மீது காா் மோதல்: தம்பதி, மகள்கள் உள்பட ஐவா் உயிரிழப்பு

அரியலூா்: தந்தையுடன் சென்ற கல்லூரி மாணவி லாரி மோதி பலி!

ஆலங்குடி அருகே சுவரில் காா் மோதி 3 போ் காயம்

லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் 10 போ் காயம்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


