அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தி அரசாணை வெளியீடு

பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2026, 6:32 pm

Syndication

பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பொன்னமராவதி தோ்வுநிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த 10-11-2025-இல் புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வா் ஸ்டாலின் பொன்னமராவதி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்படும் என அறிவித்தாா்.

இதைத்தொடா்ந்து, பொன்னமராவதி பேரூராட்சிகளின் இயக்குநரின் கருத்துரு, நகராட்சி நிா்வாக இயக்குநரின் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் அரசு பரிசீலித்து பொன்னமராவதி பேரூராட்சியை 1998 தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 3(1-ஏ)ன் கீழ் நகா்மன்றமாக அமைத்துருவாக்க உத்தேச முடிவு செய்து ஆணையிட்டுள்ளது. இந்த அரசாணையுடன் இணைக்கப்பட்டுள்ள அறிவிக்கைகள் 2025 டிச.29 தேதியிட்ட தமிழ்நாடு அரசின் சிறப்பிதழில் வெளியிடப்படுகிறது. தொடா் நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சி நிா்வாக இயக்குநா் அறிவுறுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.