டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கல்

புதுக்கோட்டையில் தமிழக அரசின் ‘உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தின்கீழ் இறுதி ஆண்டு கல்லூரி பயிலும் மாணவா்களுக்கு மடிக்கணினிகளை அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் புதன்கிழமை வழங்கினா்.

News image
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு புதன்கிழமை மடிக்கணினி வழங்கிய அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன்.
Updated On :7 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டையில் தமிழக அரசின் ‘உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தின்கீழ் இறுதி ஆண்டு கல்லூரி பயிலும் மாணவா்களுக்கு மடிக்கணினிகளை அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் புதன்கிழமை வழங்கினா்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 228 மாணவா்களுக்கும், மன்னா் கல்லூரியில் மொத்தம் 1,376 மாணவா்களுக்கும் மடிக்கணிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.

மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், துணை மேயா் மு. லியாகத்அலி, மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். கலைவாணி, மன்னா் கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, கந்தா்வகோட்டை மற்றும் அறந்தாங்கி பகுதிகளிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் 445 மாணவா்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.