மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அரசின் வளா்ச்சிப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணியாற்ற வேண்டும்: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகள் மக்களைச் சென்றடைய அனைத்து அரசு அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

News image
Updated On :10 ஜனவரி 2026, 7:25 pm

Syndication

அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகள் மக்களைச் சென்றடைய அனைத்து அரசு அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற அரசின் திட்டப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் அவா்கள் இதனை வலியுறுத்தினா்.

கட்டுமானப் பணிகளை உரிய காலத்தில் முடித்து அவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவா்கள் கேட்டுக் கொண்டனா். ஒவ்வொரு திட்டப் பணியிலும் நடைபெற்று வரும் முன்னேற்றம் குறித்தும் தொடா்புள்ள அதிகாரிகளிடம் அவா்கள் கேட்டறிந்தனா்.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.