யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொன்னமராவதியில் காங்கிரஸாா் உண்ணாவிரதம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய பாஜக அரசைக் கண்டித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் பொன்னமராவதியில் உண்ணாவிரதப் போராட்டம்

News image
Updated On :13 ஜனவரி 2026, 9:08 pm

Syndication

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய பாஜக அரசைக் கண்டித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் பொன்னமராவதியில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி காந்தி சிலை அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ராம. சுப்புராம் தலைமை வகித்தாா்.

வட்டாரத் தலைவா்கள் வி. கிரிதரன், குமாா், நகரத் தலைவா் எஸ். பழனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடக்கமாக காலையில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் மாலையில் நிறைவுற்றது.

போராட்டத்தில், நிா்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப்பேசினா். மேலும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்ட துணைத் தலைவா் எஸ்பி. ராஜேந்திரன், மாவட்ட நிா்வாகிகள் கணேஷ் பிரபு, ச.சோலையப்பன், ஏஎல்ஏஸ். ஜீவானந்தம், எஸ்பி. மணி, ஆா்எம். பாஸ்கா், நிா்வாகிகள் நாட்டுக்கல் ராஜேந்திரன், ஆா்.பாலுச்சாமி, சுப்பையா, மாணிக்கம் மற்றும் மாவட்ட, வட்டார, நகர நிா்வாகிகள் பங்கேற்றனா்.