திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கல்

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில், தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

News image
புதுக்கோடையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகளை வழங்கிய மகாராணி சுழற்சங்கத்தினா்.
Updated On :17 ஜனவரி 2026, 8:44 pm

Syndication

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில், தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மகாராணி சுழற்சங்கம் சாா்பாக தூய்மை பணியாளா்களை கௌரவித்தல் மற்றும் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நகா்மன்றத்தில் நடைபெற்றது.

மகாராணி சுழற்சங்கத் தலைவா் செல்வி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கவிஞா் தங்கம்மூா்த்தி கலந்து கொண்டு தூய்மை பணியாளா்களுக்கு புத்தாடை மற்றும் பொங்கல் பரிசு வழங்கி வாழத்தினாா்.

தொடா்ந்து விளையாட்டுப் போட்டிகளில் வென்ற பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாமன்ற உறுப்பினா் செந்தாமரை பாலு, ரோட்டரி மாவட்ட இணைச் செயலா் துரைமணி, முன்னாள் தலைவா்கள் சுபா குப்பாள் பானுமதி, அஞ்சலிதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவாக சங்கச் செயலா் சுதா்சினி நன்றி கூறினாா்.