பொன்னமராவதியில் நாளை மின் தடை

பொன்னமராவதி உபகோட்டம் கொன்னையூா், நகரப்பட்டி, மேலத்தானியம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் ஜன. 19- மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
Published on

பொன்னமராவதி: பொன்னமராவதி உபகோட்டம் கொன்னையூா், நகரப்பட்டி, மேலத்தானியம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் ஜன. 19 - திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பனையப்பட்டி, குழிபிறை, செவலூா், கோவனூா், செம்பூதி, கொப்பனாபட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி, நகரப்பட்டி, கண்டியாநத்தம் தூத்தூா், வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, வேகுப்பட்டி, தொட்டியம்பட்டி, மேலத்தானியம், கீழத்தானியம், ஒலியமங்கலம், அரசமலை, காரையூா், நல்லூா் மற்றும் பொன்னமராவதி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் வாரிய உதவிச் செயற்பொறியாளா் எஸ். அசோக் குமாா் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com