புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்துவந்த காளைகளை தழுவ முயன்ற மாடுபிடி வீரா்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்துவந்த காளைகளை தழுவ முயன்ற மாடுபிடி வீரா்கள்.

வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு 45 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 45 போ் காயமடைந்தனா்.
Published on

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 45 போ் காயமடைந்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியின் தொடக்கமாக, வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா முன்னிலையில் மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி ஏற்றனா். பின்னா், மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் போட்டியைத் தொடங்கிவைத்தாா். இதைத்தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளின் திமிலை மாடுபிடி வீரா்கள் தீரத்துடன் பற்றி வெற்றிபெற்றனா். இதில்,

புதுகை, திருச்சி, சிவகங்கை, தஞ்சை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 481 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. பல்வேறு அணிகளாக 252 மாடுபிடி வீரா்கள் களமிறக்கப்பட்டனா். இப்போட்டியில், காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள், காளையின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என 45 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாமில் உள்ள மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா். இதில், பலத்த காயமடைந்த 11 போ் புதுக்கோட்டை, ஆலங்குடி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், வீரா்களிடம் பிடிபடாத காளைகள் சாா்பில் அவற்றின் உரிமையாளா்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், மிதிவண்டி, பீரோ உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

11 காளைகளை அடக்கிய மாத்தூா் வீரா் சங்கா்:

போட்டியில் 11 காளைகளை தழுவிய மாத்தூரைச் சோ்ந்த சங்கா் சிறந்த மாடுபிடி வீரராக தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் இருசக்கர வாகனத்தை பரிசாக அளித்தாா். ஆலங்குடி போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் வந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை ஆா்வத்துடன் கண்டுகளித்தனா்.

Dinamani
www.dinamani.com