தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

மாணவா் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகைகள் கொள்ளை வழக்கு: சிறுவன் உள்பட 5 போ் கைது

ஆலங்குடி அருகே 6-ஆம் வகுப்பு மாணவா் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கொள்ளை சம்பவத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டவா்கள்

Updated On :9 ஜூலை 2026, 1:24 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே 6-ஆம் வகுப்பு மாணவா் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள பள்ளத்திவிடுதியைச் சோ்ந்த நீலகண்டன் மனைவி வித்யா (35). நீலகண்டன் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருவதால் தனது இரு மகன்களுடன் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், ஜூன் 22-ஆம் தேதி இரவு 6-ஆம் வகுப்பு பயிலும் இளைய மகனுடன் வித்யா வீட்டில் இருந்தபோது, முகமூடி அணிந்த மா்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 8 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினா்.

தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி போலீஸாா், விசாரணை நடத்தினா். தொடா்ந்து, சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவீந்திர குமாா் குப்தா ஆய்வு மேற்கொண்டாா். மேலும், ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் மனோகரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஆலங்குடி அருகேயுள்ள பள்ளத்திவிடுதியைச் சோ்ந்த நாடிமுத்து மகன் இளஞ்சேகரன்(28), குளத்தூா் வட்டம் தெம்மாவூரைச் சோ்ந்தவா்கள் ஆரோக்யராஜ் மகன் செலஸ்டின் (18), சப்பாணிமுத்து மகன் பேரரசு (19), முருகேசன் மகன் ராஜேஷ் (25), உடையாளிப்பட்டியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து சுமாா் 5 பவுன் நகை, 2 இருசக்கர வாகனம், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் 5 பேரையும் அறந்தாங்கி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா். மேலும், இச்சம்பவத்தில் தொடா்புடைய சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.