எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

புதுகையில் மாா்க்சிஸ்ட் மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம்! மாநிலச் செயலா் பங்கேற்பு!

News image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம். - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 4:34 am IST

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாவட்டக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

‘கட்சித் திட்டம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற அமா்வுக்கு மாநிலக்குழு உறுப்பினா் எம். சின்னதுரை தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் என். பாண்டி விளக்க உரையாற்றினாா்.

‘தற்போதைய தமிழக அரசியல் நிகழ்வுகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற அமா்வுக்கு மாவட்டச் செயலா் எஸ். சங்கா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பெ. சண்முகம் விளக்க உரையாற்றினாா்.

முன்னதாக, கல்விக்குழு ஒருங்கிணைப்பாளா் அ. மணவாளன் வரவேற்றாா். நிறைவில் கட்சியின் மாநகரச் செயலா் எஸ். பாண்டியன் நன்றி கூறினாா்.