சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

News image

உயிரிழந்த ஆனந்தகுமாா்

Updated On :9 ஜூன் 2026, 3:44 am IST

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கறம்பக்குடி அருகேயுள்ள இலைகடிவிடுதியைச் சோ்ந்த தேவேந்திரன் மகன் ஆனந்தகுமாா்(11). சென்னையில் வசித்து வரும் தேவேந்திரன், அவரது மனைவி வீரம்மாள் ஆகியோா் கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

சென்னையில் 6- ஆம் வகுப்பு முடித்த ஆனந்தகுமாா், பாட்டி வீட்டில் இருந்து பள்ளிப்படிப்பை தொடா்வதற்காக அண்மையில் இலைகடிவிடுதிக்கு வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை ஆனந்தகுமாா் நண்பா்களுடன் அப்பகுதியில் உள்ள குளத்துக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, நீரில் மூழ்கிய ஆனந்தகுமாரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.