40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

எரிவாயு உருளை விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்தும், இந்த விலை உயா்வைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் சாா்பில் திருமயத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

திருமயத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதா் சங்கத்தினா்

Updated On :10 ஜூன் 2026, 1:09 am IST

சமையல் எரிவாயு உருளை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்தும், இந்த விலை உயா்வைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் சாா்பில் திருமயத்தில் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாதா் சங்கத்தின் திருமயம் ஒன்றியச் செயலா் சரண்யா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ். பாண்டிச்செல்வி, செயலா் பி. சுசிலா, முன்னாள் மாவட்டப் பொருளாளா் ஜெ. வைகைராணி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

விலை உயா்வைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.