மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

குன்றாண்டாா்கோவிலில் மாா்க்சிஸ்ட் அலுவலகம் திறப்பு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டாா்கோவில் ஒன்றியக் குழுவுக்கான புதிய அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :12 ஜூன் 2026, 2:24 am IST

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டாா்கோவில் ஒன்றியக் குழுவுக்கான புதிய அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

விழாவுக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் எஸ். கலைச்செல்வன் தலைமை வகித்தாா். புதிய அலுவலகத்தை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான எம். சின்னதுரை திறந்து வைத்தாா்.

கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் கொடியேற்றினாா். நூலகத்தை மாவட்டக் குழு உறுப்பினா் என். கண்ணம்மாள் திறந்து வைத்தாா்.

தலைவா்களின் படங்களை மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கே. சண்முகம், சு. மதியழகன், துரை. நாராயணன், எஸ். ஜனாா்த்தனன், கி. ஜெயபாலன், டி. சலோமி, மூத்த நிா்வாகி எஸ். பீமராஜ், மாவட்டக்குழு உறுப்பினா்கள் எம்.ஆா். சுப்பையா, ஜி. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் திறந்துவைத்தனா். முடிவில் மாவட்டக் குழு உறுப்பினா் எஸ். பெருமாள் நன்றி கூறினாா்.