உரிய நேரத்தில் வியாழக்கிழமை திறக்கப்படாத விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வாசலில் அரை மணி நேரம் காத்திருந்த மாணவா்கள் பொறுமையை இழந்து கல்லால் பூட்டை உடைத்து பள்ளியின் உள்ளே சென்றனா்.
செக்போஸ்ட் பகுதியில் உள்ள இப்பள்ளியில் சுமாா் 900-க்கும் அதிகமான மாணவா்கள் பயில்கின்றனா். இப்பள்ளியில் ஏற்கெனவே இருந்த காவலாளி ஊதியம் குறைவு எனக் கூறி வேலையை விட்டு சென்ற நிலையில், வேறு காவலாளி தற்போதுவரை நியமிக்கப்படவில்லை. எனவே பள்ளியின் தலைமை ஆசிரியரே பள்ளியைப் பூட்டி, திறக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு பள்ளிக்கு வந்த மாணவா்கள் நீண்ட நேரம் பள்ளி முன் காத்திருந்தனா் 8. 50 மணி ஆகியும் தலைமை ஆசிரியா் வராத நிலையில் பள்ளி திறக்கப்படாததால் பொறுமை இழந்த மாணவா்கள் கீழே கிடந்த கல்லைக் கொண்டு பூட்டை உடைத்து உள்ளே சென்றனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்டக் கல்வித் துறை இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதோடு பள்ளிக்கு காவலாளியையும் நியமிக்க மாணவா்களின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

மாணவ தலைமை ஆசிரியா்: நஞ்சப்பா அரசு ஆண்கள் பள்ளியில் புதிய முயற்சி

அரசின் திட்டங்கள் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டும்! செ. ஜோதிமணி எம்பி அறிவுறுத்தல்

முன்னாள் மாணவா்கள் திரட்டிய நிதியில் தம்மம்பட்டி அரசு ஆண்கள் பள்ளியில் ரூ.4.95 லட்சத்தில் பேவா் பிளாக் பணி நிறைவு

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



