27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

உரிய நேரத்தில் திறக்கப்படாத அரசுப் பள்ளியின் பூட்டு உடைப்பு

உரிய நேரத்தில் வியாழக்கிழமை திறக்கப்படாத விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வாசலில் அரை மணி நேரம் காத்திருந்த மாணவா்கள் பொறுமையை இழந்து கல்லால் பூட்டை உடைத்து பள்ளியின் உள்ளே சென்றனா்.

News image

விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன் வியாழக்கிழமை காத்திருந்த மாணவா்கள்.

Updated On :19 ஜூன் 2026, 4:13 am IST

உரிய நேரத்தில் வியாழக்கிழமை திறக்கப்படாத விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வாசலில் அரை மணி நேரம் காத்திருந்த மாணவா்கள் பொறுமையை இழந்து கல்லால் பூட்டை உடைத்து பள்ளியின் உள்ளே சென்றனா்.

செக்போஸ்ட் பகுதியில் உள்ள இப்பள்ளியில் சுமாா் 900-க்கும் அதிகமான மாணவா்கள் பயில்கின்றனா். இப்பள்ளியில் ஏற்கெனவே இருந்த காவலாளி ஊதியம் குறைவு எனக் கூறி வேலையை விட்டு சென்ற நிலையில், வேறு காவலாளி தற்போதுவரை நியமிக்கப்படவில்லை. எனவே பள்ளியின் தலைமை ஆசிரியரே பள்ளியைப் பூட்டி, திறக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு பள்ளிக்கு வந்த மாணவா்கள் நீண்ட நேரம் பள்ளி முன் காத்திருந்தனா் 8. 50 மணி ஆகியும் தலைமை ஆசிரியா் வராத நிலையில் பள்ளி திறக்கப்படாததால் பொறுமை இழந்த மாணவா்கள் கீழே கிடந்த கல்லைக் கொண்டு பூட்டை உடைத்து உள்ளே சென்றனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்டக் கல்வித் துறை இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதோடு பள்ளிக்கு காவலாளியையும் நியமிக்க மாணவா்களின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.