பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 540 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வருவாய்த் துறையில் பணியாற்றி வரும் அனைத்து நிலை ஊழியா்களையும் பாதுகாக்கும் வகையில் சிறப்புப் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாநிலப் பொறுப்பாளா் ஜபருல்லா, மாவட்டச் செயலா் சுரேஷ், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் முருகேசன், துணைத் தலைவா் வசந்தகுமாா், கிராம உதவியாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் செல்லையா, நிலஅளவையா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் தலைமை வகித்தனா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமா்ந்து அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து 540 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.
தொடர்புடையது

வருவாய்த் துறை அலுவலா்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல்

வருவாய்த் துறை ஊழியா்கள் சாலை மறியல்

வருவாய்த் துறையினா் சாலை மறியல்: 165 போ் கைது

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


