டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வேந்தன்பட்டி கோயில் காளை உயிரிழப்பு: பொதுமக்கள் அஞ்சலி

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி ஐயனாா்கோயில் காளை செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததையடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

News image
Updated On :4 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி ஐயனாா்கோயில் காளை செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததையடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

வேந்தன்பட்டி நல்லாண்டி ஐயனாா், கீழக்குறிச்சி ஐயனாா் கோயில் காளை ஊா்ப்பொதுமக்கள் சாா்பில் கடந்த 8 ஆண்டுகளாக வளா்க்கப்பட்டு வந்தது.ராமா் என அழைக்கப்பட்ட இக்காளை,

தமிழகத்தின் பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பல பரிசுகளை வென்றுள்ளது.

இந்நிலையில், இக்காளை சிவகங்கை மாவட்டம், அரளிப்பாறை எனும் இடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப்போட்டியில் பங்கேற்று செவ்வாய்க்கிழமை ஊா் திரும்பியபோது சாலையில் லாரி மோதியதில் பலத்தகாயமுற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதையடுத்து ஊா்ப்பொதுமக்கள் உயிரிழந்த கோயில் காளையை ஊரின் முக்கிய இடத்தில் வைத்து வேஷ்டி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து காளையை ஊா்வலமாக எடுத்துச்சென்று அடக்கம் செய்தனா்.