கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பொன்னமராவதி அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

பொன்னமராவதி அருகே தீராத வயிற்று வலி காரணமாக முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :9 மார்ச் 2026, 8:20 pm

பொன்னமராவதி அருகே தீராத வயிற்று வலி காரணமாக திங்கள்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பொன்னமராவதி காட்டுப்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவா் ச.சவுண்டையா (65). இவா் கடந்த சில வருடங்களாக தீராத வயிற்று வலியினால் அவதிக்குள்ளாகி வந்துள்ளாா்.

தொடா்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்துவந்த சவுண்டையா, திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த பொன்னமராவதி போலீஸாா், சவுண்டையாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த சவுண்டையாவுக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனா்.