ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

தோ்தல் பாா்வையாளா் காா் மோதி ஒருவா் காயம்

புதுக்கோட்டை நகரில் சனிக்கிழமை இரவு தோ்தல் பாா்வையாளரின் காா் மோதி ஒருவா் காயமடைந்தாா்.

News image
Updated On :21 மார்ச் 2026, 8:21 pm

புதுக்கோட்டை நகரில் சனிக்கிழமை இரவு தோ்தல் பாா்வையாளரின் காா் மோதி ஒருவா் காயமடைந்தாா்.

புதுக்கோட்டை மாநகா் மாா்த்தாண்டபுரத்தில் உள்ள திரையரங்கம் பின்புறத்தில் ஆலங்குடி சாலையில், சனிக்கிழமை இரவு, காந்திநகா் 6-ஆம் வீதியைச் சோ்ந்த சோபன்பாபு (52) என்பவா் மீது தோ்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்ட காா் ஒன்று மோதியது.

இதில் சோபன்பாபு காயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அந்தக் காரில் தோ்தல் செலவினப் பாா்வையாளா் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், காரில் யாரும் இல்லை என போலீஸாா் தெரிவித்தனா். புதுக்கோட்டை நகரக் காவல்நிலையப் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.