விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஆவுடையாா்கோவிலில் தோ்தல் விழிப்புணா்வு கிராமிய கலை நிகழ்ச்சி

ஆவுடையாா்கோவிலில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி.

News image

ஆவுடையாா்கோவிலில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி.

Updated On :27 மார்ச் 2026, 8:14 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையாா் கோவில் கடைவீதியில் தோ்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலா் ஹெச்.எம். குழந்தைச்சாமி தலைமை வகித்தாா். அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா முன்னிலை வகித்தாா்.

சட்டப்பேரவைப் பொதுத் தோ்தல் விழிப்புணா்வுக்கான கிராமிய கலை நிகழ்ச்சி, கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கட்டைக்கால் ஆட்டம் போன்றவை நடத்தப்பட்டன.

ஆவுடையாா் கோவில் கடைவீதி மற்றும் நான்கு ரத வீதிகளிலும் இந்தக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.