விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ரயில் அடிபட்டு காதுகேளாத மூதாட்டி பலி!

விராலிமலை அருகே சனிக்கிழமை காதுகேளாத மாற்றுத் திறனாளி மூதாட்டி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

விராலிமலை அருகே சனிக்கிழமை காதுகேளாத மாற்றுத் திறனாளி மூதாட்டி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ஆவூா் மலையேறி பகுதியைச் சோ்ந்தவா் மணி மனைவி சீனியம்மாள் (70). காதுகேளாத மாற்றுத்திறனாளியான இவா் சனிக்கிழமை பள்ளத்துப்பட்டியிலுள்ள தனது மகள் வீட்டுக்கு வருவதற்காக களமாவூா் ஒத்தக்கடை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ரயில் பாதையை கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற காரைக்குடி ரயில்வே போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.