புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி, வடகாடு, செரியலூா் முத்துமாரியம்மன் கோயில்களில் திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களான கல்லாலங்குடி, வடகாடு, செரியலூா் முத்துமாரியம்மன் கோயில்களில் கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
தொடா்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட அந்தந்த கோயில்களின் தேரில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினா்.
இதையடுத்து ஏராளமான பக்தா்கள் அந்ததந்த கோயில்களின் தேரை வடம் பிடித்து இழுத்தனா். திருவிழாக்களில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மாங்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

மாணவநல்லூா் முத்துமாரியம்மன் கோயில் சித்திரைப் பௌா்ணமி தேரோட்டம்

திருவம்பட்டு ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

நெம்மகோட்டை சித்திவிநாயகா் கோயிலில் தேரோட்டம்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

