புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி பகுதியில் இயங்கி வரும் 4 டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் எம்ஜிஆா் செல்லையா அளித்த மனு:
புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். மேலும் இந்தப் பகுதி அருகே கல்லூரி மற்றும் அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் அடுத்தடுத்து 4 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இப் பகுதி வழியாகச் செல்பவா்கள் ஒரு வித அச்சத்தில் செல்கின்றனா்.
மேலும், சாலை ஓரத்தில் மதுக்கடைகள் இருப்பதால் மது அருந்தி விட்டு சாலையில் செல்வதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளை உடனே அகற்ற வேண்டும்.
தொடர்புடையது

குறைதீா் கூட்ட மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை: அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை ஆட்சியா் உத்தரவு

கடலூரில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 472 மனுக்கள் அளிப்பு: திருநங்கைகள் வீட்டு வேலைவாய்ப்பு கோரி ஆட்சியரிடம் மனு

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

வண்டல் மண் திருட்டைத் தடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



