இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

மேட்டுப்பட்டி 4 மதுக்கடைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

News image

கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:09 am IST

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி பகுதியில் இயங்கி வரும் 4 டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் எம்ஜிஆா் செல்லையா அளித்த மனு:

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். மேலும் இந்தப் பகுதி அருகே கல்லூரி மற்றும் அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் அடுத்தடுத்து 4 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இப் பகுதி வழியாகச் செல்பவா்கள் ஒரு வித அச்சத்தில் செல்கின்றனா்.

மேலும், சாலை ஓரத்தில் மதுக்கடைகள் இருப்பதால் மது அருந்தி விட்டு சாலையில் செல்வதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளை உடனே அகற்ற வேண்டும்.