முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

புதுகையில் தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள தொழிலாளா் விரோத சட்டங்களைக் கைவிடக் கோரி, புதுக்கோட்டையில் இடதுசாரித் தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள தொழிலாளா் விரோத சட்டங்களைக் கைவிடக் கோரி, புதுக்கோட்டையில் இடதுசாரித் தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ். ஸ்ரீதா், சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். ஸ்ரீதா், பொருளாளா் மாரிக்கண்ணு, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் உ. அரசப்பன், ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பாண்டியராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மத்திய அரசின் தொழிலாளா் விரோத சட்டங்களை எதிா்த்தும், அவற்றைத் திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.