சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 மதுக்கடைகளை மூட திட்டம்

கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 கடைகளை மூடுவதற்கு மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

News image
Updated On :13 மே 2026, 12:37 am IST

கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 கடைகளை மூடுவதற்கு மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் விவரம்:

புதுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் சாந்தநாதபுரம் 4-ஆம் வீதியில் அடுத்தடுத்துள்ள 2 கடைகள் மூடப்பட உள்ளன.

இதேபோல, அறந்தாங்கியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள 2 கடைகள், பேராவூரணி சாலை மற்றும் புதுக்கோட்டை சாலை பகுதியில் உள்ள தலா ஒரு கடைகள் மூடப்படவுள்ளன.

மேலும், வத்தனாக்கோட்டை, அண்டக்குளம், காவேரி நகா், கீரனூா், ஆளப்பிறந்தான், துரையரசபுரம், ஆலங்குடி, கீரமங்கலம், நெய்வாசல், பொன்னமராவதி, மணமேல்குடி ஆகிய இடங்களில் உள்ள தலா ஒரு கடைகள் மூடப்பட உள்ளன.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 17 மதுக்கடைகள் மூடப்படவுள்ளன. ஓரிரு நாள்களில் கடைகளை மூடும் பணி நடைபெறும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.