புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை உலக செவிலியா்கள் தினம் கொண்டாடப்பட்டது.
உலக செவிலியா் தினத்தையொட்டி, புதுக்கோட்டை பழைய மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள, மனநலப் பிரிவில் பணியாற்றும் செவிலியா்கள் மற்றும் அடையாறு புற்றுநோய் பரிசோதனை மையத்தில் பணியாற்றும் செவிலியா்களை மரம் நண்பா்கள் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து பயனாடை அணிவித்து, இனிப்பு வழங்கி, நூல்கள் பரிசளித்து பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
இந்நிகழ்வில் மனநல மருத்துவா் க. ஜீவிதா, பல் மருத்துவா் ச. ஆறுமுகக்குமரன், மரம் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சா. விஸ்வநாதன், செயலா் ப. ராதாகிருஷ்ணன், உறுப்பினா்கள் கிருஷ்ணமூா்த்தி, ராஜு, அடையாறு புற்றுநோய் ஆய்வக பணிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வெங்கடேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









