‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கட்டுமானத் தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு வாரிய நிதி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த கட்டுமானத் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு நல வாரியத்தின் நிதி தலா ரூ. 5 லட்சத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை வழங்கினாா்.

News image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகதத்தில் பணியின்போது இறந்த கட்டுமானத் தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு நிதி காசோலைகளை வியாழக்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா (வலதுஓரம்).

Updated On :22 மே 2026, 4:35 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த கட்டுமானத் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு நல வாரியத்தின் நிதி தலா ரூ. 5 லட்சத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு அரசின் தொழிலாளா் நலத் துறை சாா்பில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியங்கள் மூலம் இந்த நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

கட்டுமானத் தொழிலாளா்கள் மல்லிகா, அடைக்கலம், சக்திவேல், முருகேசன் ஆகியோா் பணியின்போது அண்மைக்காலத்தில் இறந்தவா்கள். நல வாரிய உறுப்பினா்களான இவா்களின் குடும்பத்தினா் இறப்பு நிதி கோரி விண்ணப்பித்திருந்தனா்.

இதையடுத்து தலா ரூ. 5 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 20 லட்சத்துக்கான காசோலைகள் இறந்தவா்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தொழிலாளா் நல உதவி ஆணையா் அ. கௌரி, உதவிக் கணக்கு அலுவலா் செல்லத்துரை ஆகியோரும் உடனிருந்தனா்.