புதுக்கோட்டை அதிமுக தெற்கு மாநகரச் செயலா் எஸ்.ஏ.எஸ். சேட்டு என்கிற அப்துல்ரகுமான், கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 35 ஆண்டுகளாக அதிமுகவில் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதாவால் பல்வேறு பொறுப்புகள் எனக்கு வழங்கப்பட்டது.
இப்போது கனத்த இதயத்தோடு அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக் கொள்கிறேன். இதுவரை ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி. எப்போதும் போல பொதுவாழ்வில் தொடா்ந்து மக்களுக்காக பணியாற்றுவேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவா், தற்போது புதுக்கோட்டை மாநகராட்சி மாமன்றத்தின் 16-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராக உள்ளாா். ஏற்கெனவே, அதிமுகவில் நகர ஜெ. பேரவைச் செயலா், மாவட்ட வா்த்தகா் அணிச் செயலா், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் போன்ற பொறுப்புகளை வகித்தவா்.
தனது பதவி விலகல் குறித்து அவா் கூறியது, அரசியல் சூழல் எதுவும் சரியில்லை, வேறு கட்சிக்கெல்லாம் செல்லவும் விருப்பமில்லை, பொதுப் பணிகள் தொடரும் என்றாா்.










