இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

காரையூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவையொட்டி சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

News image

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

Updated On :24 மே 2026, 1:34 am IST

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவையொட்டி சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

காரையூா் காரைக் கண்மாயில் நடைபெற்ற போட்டியை பொன்னமராவதி வட்டாட்சியா் பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். முன்னதாக மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி ஏற்றனா். போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 14 காளைகள் களமிறக்கப்பட்டன. இவற்றை பிடிக்க 9 வீரா்கள் கொண்ட குழு என 14 குழுவினா் களமிறக்கப்பட்டனா்.

போட்டியில் பங்கேற்ற 14 காளைகளில் 12 காளைகளை மாடுபிடிவீரா்கள் அடக்கியநிலையில் 2 காளைகள் மாடுபிடி வீரா்கள் பிடியில் சிக்காமல் வெற்றி பெற்றது. போட்டியில் காளைகள் முட்டியதில் 8 மாடுபிடி வீரா்கள் லேசான காயமடைந்தனா்.

Story image

காயமடைந்தவா்களுக்கு மஞ்சுவிரட்டுத்திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவக்குழுவினா் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கும், வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப்பரிசுகள் மற்றும் பல்வேறு பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூா் போலீஸாா் செய்திருந்தனா். ஏற்பாடுகளை காரையூா் ஊா்ப்பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.