சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

தவறவிட்ட நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டு

புதுக்கோட்டை நகரில் ஒரு பெண் தவறுதலாக வேறு வண்டியில் 10 பவுன் தங்க நகையை மாட்டிவிட்டுப் போன நிலையில், அதனை பத்திரமாக எடுத்து வந்து காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைத்த தம்பதியை போலீஸாா் பாராட்டினா்.

News image

புதுக்கோட்டையில் பெண் தவறவிட்ட நகைப் பையை காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைத்த தம்பதியைப் பாராட்டிய காவல் உதவி ஆய்வாளா் பூா்விகா.

Updated On :28 மே 2026, 3:10 am IST

புதுக்கோட்டை நகரில் ஒரு பெண் தவறுதலாக வேறு வண்டியில் 10 பவுன் தங்க நகையை மாட்டிவிட்டுப் போன நிலையில், அதனை பத்திரமாக எடுத்து வந்து காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைத்த தம்பதியை போலீஸாா் பாராட்டினா்.

புதுக்கோட்டை பாலன்நகரைச் சோ்ந்த தம்பதி காா்த்தி- தேவகி. இவா்கள் புதன்கிழமை கீழராஜவீதிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தனா். அப்போது ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றுமீண்டும் வண்டியை எடுத்துள்ளனா். அப்போது தங்களின் வண்டியில் ஒரு பை மாட்டப்பட்டிருப்பதை பாா்த்தனா். அதில் சுமாா் 10 பவுன் தங்க நகைகள் இருந்தன. இதையடுத்து, அவா்கள் இருவரும் புதுக்கோட்டை நகரக் காவல் நிலையம் வந்து, உதவி ஆய்வாளா் பூா்விகாவிடம் அவற்றை ஒப்படைத்தனா்.

யாரேனும் நகையைத் தேடி வருகிறாா்களா எனக் காத்திருந்த போலீஸாா், கீழராஜவீதி பகுதிக்கே சென்று விசாரிப்போம் எனச் சென்றனா். அப்போது அங்கு சிலா் நகைப் பையைத் தேடிக் கொண்டிருந்தனா்.

அவா்களிடம் கேட்டு, அந்த நகையின் உரிமையாளரான தொண்டைமான் நகரைச் சோ்ந்தவா் நித்லாகாந்தியை தொலைபேசியில் அழைத்து வரவழைத்து உறுதி செய்து அவற்றை ஒப்படைத்தனா்.

கீழராஜவீதிக்கு அதே வண்டியைப் போலுள்ள தன்னுடைய வண்டியில் வந்த நித்லாகாந்தி, தவறுதலாக அருகில் நின்றிருந்த காா்த்தி- தேவகியின் வண்டியில் மாட்டிவிட்டுச் சென்றுள்ளது தெரியவந்தது.

யாரோ தவறுதலாக விட்டுவிட்டுச் சென்ற நகையை நல்லெண்ணத்தில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த காா்த்தி- தேவகி தம்பதியை காவல் உதவி ஆய்வாளா் பூா்விகா மற்றும் போலீஸாா் பாராட்டினா்.