
கோதண்டராமபுரம் அரசுப் பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாம்
குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்களின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் கோதண்டபுரம் அரசுப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது

குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்களின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் கோதண்டபுரம் அரசுப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது
கோதண்டராமபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் க.வேங்கடலெட்சுமி, கே. இரா.சரவணன் மற்றும் மாணவா்கள் பள்ளியை தூய்மைப் படுத்தினா்.பிறகு ரத்ததானம் வழங்கினா்.
முகாமில் சிறப்பு விருந்தினராக மருத்துவா் சரவணன், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, சுகாதார ஆய்வாளா் வீரமணி மற்றும் மருத்துவ குழுவினா்கள் கலந்து கொண்டனா். நிறைவாக, மருத்துவா் சரவணன் ரத்ததானம் வழங்கி மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




