
விநாடி- வினா போட்டியில் முதலிடம் மாணவா்களுக்குப் பாராட்டு
விநாடி-வினா போட்டியில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்களை பாராட்டிய பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி.

விநாடி-வினா போட்டியில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்களை பாராட்டிய பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி.
புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய மாவட்ட அளவிலான துளிா்- ஜந்தா்மந்தா் விநாடி- வினா போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்களை, பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி பாராட்டினாா்.
மாணவா்கள் வி.கே. கவிசாகா், ம.க. ஜெயவா்த்தினி, எம். லோகஸ்ரீ ஆகியோா் இப்போட்டியில் பங்கேற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனா். இவா்கள் திருவாரூரில் நடைபெறவுள்ள மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.
இதைத் தொடா்ந்து மாணவா்களை பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி, இயக்குநா் ரா. சுதா்சன் ஆகியோா் வெள்ளிக்கிழமை நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






