கோயில்களில் இரவுக் காவலா் பணி முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

போலீஸ் - கோப்புப்படம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 13 கோயில்களில் இரவு நேரக் காவல் பணியில் ஈடுபடுவதற்கு, முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 13 கோயில்களில் இரவு நேரக் காவல் பணிக்கு முன்னாள் படைவீரா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.
இதற்கு, 62 வயதுக்குள்பட்ட திடகாத்திரமான உடல் நிலையைக் கொண்டுள்ள முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம். பணிச்சான்று, அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக நகல், ஒரு புகைப்படம் ஆகியவற்றுடன், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






