கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

"உலக வர்த்தக ஒப்பந்தத்தை ஆதரிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது'

 உலக வர்த்தக ஒப்பந்தத்தை ஆதரிக்கும் கட்சிகளுக்குப் பொதுமக்கள் வாக்களிக்கக்கூடாது என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன்.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

 உலக வர்த்தக ஒப்பந்தத்தை ஆதரிக்கும் கட்சிகளுக்குப் பொதுமக்கள் வாக்களிக்கக்கூடாது என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன்.

உலக வர்த்தக ஒப்பந்தத்தை முறியடிக்கக் கோரி, மார்ச் 1-ம் தேதி சென்னையில் தொடங்கிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் இரு சக்கர வாகனப் பேரணி தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வந்தது. இந்தப் பேரணியில் வந்த வெள்ளையன் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலைய எதிரில் செய்தியாளர்களிடம் கூறியது:

புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் நாட்டை நாசப்படுத்தி வரும் உலக வர்த்தக ஒப்பந்தத்தால், நாட்டில் தரமற்ற பொருள்கள் வெளிவருகின்றன. உடல் நலத்துக்குத் தீங்கு தரும் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

எனவே, உலக வர்த்தக ஒப்பந்தத்தை முறியடிக்க வேண்டும். உலக வர்த்தக ஒப்பந்தத்தை ஆதரிக்கும் கட்சிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கக் கூடாது என்றார் வெள்ளையன். அப்போது, பேரவையின் மாவட்டத் தலைவர் எம். கணேசன், செயலர் முருகேசன், பொருளாளர் ஆத்மநாதன், தஞ்சை நகரத் தலைவர் வாசுதேவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.