காணாமல்போன தாய், மகள் மீட்பு

அறந்தாங்கி அருகே காணாமல் போன தாய், மகளை  ஆவுடையார்கோவில்  போலீஸார் மீட்டனர். 
Updated on
1 min read

அறந்தாங்கி அருகே காணாமல் போன தாய், மகளை  ஆவுடையார்கோவில்  போலீஸார் மீட்டனர். 
இடையன்காடு கிராமத்தை சேர்ந்த சுப்பையா மகள் ரேவதிக்கும் (30) பாண்டிச்செல்வம் என்பவருக்குத் திருமணம்  நடந்து, ஹரிணி(8) என்கிற மகள் உள்ளார். 
இந்நிலையில் பாண்டிச்செல்வம் வெளிநாடு சென்றுவிட கடந்த மாதம்  27-ம் தேதி ரேவதியையும், ஹரிணியையும் காணவில்லை.  இதுகுறித்து ரேவதியின் சகோதரர் அருள்ராஜ் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிந்த ஆவுடையார்கோவில் காவல் ஆய்வாளர் முத்துக்கண்ணு  தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில் இருவரும் திருப்பூரில் இருவரும் தகவலறிந்து இருவரையும்  போலீஸார் அழைத்து வந்து அறந்தாங்கி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com