பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் வைக்கோல்போரில் தீ விபத்து ஏற்பட்டது.
கண்டியாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மலையாண்டி. விவசாயியான இவரது வீட்டின் அருகே உள்ள வைக்கோல்போரில் புதன்கிழமை மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து சென்ற பொன்னமராவதி தீயணைப்புபடையினர் பொதுமக்கள் உதவியுடன் தீயணைத்தனர். எனினும் தீவிபத்தில் ரூ 10 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.