விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

விடுபட்டவர்களுக்கு உடனடியாக பயிர்க்காப்பீடு வழங்கப்படும் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் தகவல்

விடுபட்ட விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் கோவிந்தராசு தெரிவித்தார்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:48 am

DIN

விடுபட்ட விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் கோவிந்தராசு தெரிவித்தார்.
பேராவூரணி வட்டம் விளங்குளம் ஊராட்சியில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு தலைமையில் புதன்கிழமை மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரபாகரன், வட்ட வழங்கல் அலுவலர் சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட, வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, 5 பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆணை, 10 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார். முகாமில் அவர் பேசுகையில், "தகுதியுள்ள விவசாயிகளுக்கு, பயிர் காப்பீட்டு இழப்பு தொகை உடனடியாக பெற்றுத்தரப்படும். பள்ளிக்கூட சுற்றுச்சுவர் கட்டித்தரப்படும். விளங்குளம் திருக்கோயில் சுற்றுச்சுவர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேய்ச்சல் தரிசு, புஞ்சை நிலங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி ஆய்வு செய்யப்படும்' என்றார்.
மக்கள் நேர்காணல் முகாமையொட்டி சேதுபாவாசத்திரம் வட்டார சுகாதார துறை சார்பில் மருத்துவ முகாமும் நடைபெற்றது. இதில், முன்னாள் ஊராட்சித் தலைவர் வீ.கே.முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.