குடந்தை விவசாயிகள் தில்லி பயணம்

புதுதில்லியில் நடைபெறவுள்ள விவசாயிகளின் பாராளுமன்றத்தில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை மாலை கும்பகோணத்தில் இருந்து ரயில் மூலம் விவசாயிகள் தில்லி புறப்பட்டு சென்றனர்.
Updated on
1 min read

புதுதில்லியில் நடைபெறவுள்ள விவசாயிகளின் பாராளுமன்றத்தில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை மாலை கும்பகோணத்தில் இருந்து ரயில் மூலம் விவசாயிகள் தில்லி புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக, தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர விமலநாதன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் தேசிய கொடி, நெல் நாற்றுகள் மற்றும் தலையில் விதைநெல் மூட்டைகளுடன் ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை மாலை கோஷமிட்டவாறு  ஊர்வலமாக வந்தனர்.
இதுகுறித்து சுவாமிமலை விமலநாதன் செய்தியாளர்களிடம் கூறியது:
விவசாயிகளின் தற்கொலைக்கு தீர்வு காண கோரியும், அனைத்து விவசாயிகளும் அனைத்துவித கடன்களில் இருந்து முழுமையாக விடுதலையை பெறவும், விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான, கட்டுப்படியான விலையை நிர்ணயிக்க கோரியும்,   தமிழக விவசாயிகளின் தலைவர் அய்யாக்கண்ணு கடந்த 141 நாள்களாக  தில்லியில் போராடி வருகிறார். ஆனால், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் கவலை கொள்ளவில்லை. இதையடுத்து,  நாடு முழுவதும் உள்ள 172 விவசாய அமைப்புகள் ஒன்று கூடி அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழுவை ஏற்படுத்தி,  அந்தக் குழுவின் தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக அய்யாக்கண்ணுவையும்,  உத்தரப் பிரதேசத்தை சார்ந்த வி.எம்.சிங் ஆகியோரை தேர்ந்தெடுத்து,  அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புகுழுவின் சார்பில் வரும் 20,  21, 22 ஆகிய தேதிகளில் தில்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் நடத்தும் பாராளுமன்றம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் இருந்து திரளான  விவசாயிகள் பங்கேற்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com