வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

பழநி முருகன் கோயில் சிலை வழக்கு: இருவரது ஜாமீன் மனு தள்ளுபடி

பழநி முருகன் கோயில் சிலை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனுக்களை கும்பகோணம் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:39 am IST

பழநி முருகன் கோயில் சிலை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனுக்களை கும்பகோணம் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவபாஷாண மூலவர் சிலையை புதிதாக வடிவமைத்ததில் முறைகேடு நிகழ்ந்ததாகக் கோயிலின் முன்னாள் இணை ஆணையர் கே.கே. ராஜா (66), சிலையை வடிவமைத்த முத்தையா ஸ்தபதி (77) ஆகியோரை  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மார்ச் 24-ம் தேதி கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு ஏப். 2-ம் தேதி சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. ராஜா, முத்தையா ஸ்தபதி ஜாமீன் கேட்டு ஏப். 2-ம் தேதி கும்பகோணம் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதுதொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில் இந்தமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.