காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஏப். 11-ல் ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஏஐடியுசி அரசுப் போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், தமிழகத்தைப் பாலைவனமாக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ உள்ளிட்ட திட்டங்களைக் கைவிடக் கோரியும் தஞ்சாவூரில் ஏப். 11-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது, இதில் அனைத்து துறை ஓய்வு பெற்றவர்களையும் பங்கேற்க அழைப்பது, கடந்த ஜனவரி மாதம் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களையும் புதிய ஊதிய உயர்வின் அடிப்படையில் இணைத்து உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்.
வாரிசு பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களைக் கால தாமதம், எவ்வித நிபந்தனையும் இன்றி பணி வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத் தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் பி. அப்பாதுரை, ஏஐடியுசி மாவட்டச் செயலர்ஆர். தில்லைவனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்நாடகத்தில் எச்5என்1 வைரஸ் தொற்றால் 44 மயில்கள் இறந்தன!

நான் ஒரு பம்பரம் சாம்பியன்: சஞ்சு சாம்சன்

ஷிவம் மாவிக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாதில் இணைந்த தமிழக வீரர்!

கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

