காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஏப். 11-ல் ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஏஐடியுசி அரசுப் போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், தமிழகத்தைப் பாலைவனமாக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ உள்ளிட்ட திட்டங்களைக் கைவிடக் கோரியும் தஞ்சாவூரில் ஏப். 11-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது, இதில் அனைத்து துறை ஓய்வு பெற்றவர்களையும் பங்கேற்க அழைப்பது, கடந்த ஜனவரி மாதம் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களையும் புதிய ஊதிய உயர்வின் அடிப்படையில் இணைத்து உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்.
வாரிசு பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களைக் கால தாமதம், எவ்வித நிபந்தனையும் இன்றி பணி வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத் தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் பி. அப்பாதுரை, ஏஐடியுசி மாவட்டச் செயலர்ஆர். தில்லைவனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

