கோடைகாலத்தை முன்னிட்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகள் நினைவாக கும்பகோணம் கருப்பூரில் செவ்வாய்க்கிழமை தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
கும்பகோணம் பக்தபுரி தெருவில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் தேதி கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தன.
இந்த குழந்தைகளின் நினைவாக ஆண்டுதோறும் கோயில் சிவாச்சாரியார்களான ரவி, சிவகுமார் ஆகியோர் கும்பகோணத்தை அடுத்த கருப்பூரில் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தலை திறந்து, பொதுமக்களுக்கு சுமார் ஒரு மாத காலம் சேவை செய்வது வழக்கம்.
அதன்படி, செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் ரவி மற்றும் சிவக்குமார் சிவாச்சாரியார்கள் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தலை திறந்தனர். இந்நிகழ்ச்சியில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலங்குளம் நல் மேய்ப்பா் ஆலயத்தில் 29-வது பிரதிஷ்டை பண்டிகை!
இன்றைய ராசி பலன் (18.05.2026) - கன்னி
இன்றைய ராசி பலன் (18.05.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (18.05.2026) - தனுசு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
