மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

பள்ளி தீவிபத்தில் இறந்தோர் நினைவாக தண்ணீர் பந்தல்

கோடைகாலத்தை முன்னிட்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகள் நினைவாக கும்பகோணம் கருப்பூரில் செவ்வாய்க்கிழமை தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:51 am IST

கோடைகாலத்தை முன்னிட்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகள் நினைவாக கும்பகோணம் கருப்பூரில் செவ்வாய்க்கிழமை தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
கும்பகோணம் பக்தபுரி தெருவில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் தேதி கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட  தீவிபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தன. 
இந்த குழந்தைகளின் நினைவாக ஆண்டுதோறும் கோயில் சிவாச்சாரியார்களான ரவி, சிவகுமார் ஆகியோர் கும்பகோணத்தை அடுத்த கருப்பூரில் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தலை திறந்து, பொதுமக்களுக்கு சுமார் ஒரு மாத காலம் சேவை செய்வது வழக்கம். 
அதன்படி, செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் ரவி மற்றும் சிவக்குமார் சிவாச்சாரியார்கள் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தலை திறந்தனர். இந்நிகழ்ச்சியில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.