எஸ்.வி.சேகரை கைது செய்ய தமிழ்த் தேசிய பேரியக்கம் வலியுறுத்தல்
பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வலியுறுத்தினார்.


பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறான கருத்தை தமது வலைத்தளத்தில் பதிவு செய்தார்.
இதனைக் கண்டித்து, எஸ்.வி.சேகர் வீட்டின் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை மிரட்டல், கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
அதேவேளையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட எஸ்.வி.சேகர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. நடிகர் எஸ்.வி.சேகரை உடனடியாகக் கைது செய்வதோடு, ஊடகத் துறையினர் மீது போடப்பட்ட வழக்கை கைவிட வேண்டும் என்றார் பெ.மணியரசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...