/

பொறுப்பேற்பு

பாபநாசம் சரக காவல் துணை கண்காணிப்பாளராக பொ.வ. நந்தகோபால் திங்கள்கிழமை பொறுப்பேற்று கொண்டார்.

Updated On :25 டிசம்பர் 2018, 9:42 am IST

பாபநாசம் சரக காவல் துணை கண்காணிப்பாளராக பொ.வ. நந்தகோபால் திங்கள்கிழமை பொறுப்பேற்று கொண்டார்.
இவர் திருவாருர் மாவட்டத்தில் 2017 ம் ஆண்டில் அடிப்படை பயிற்சி, செயல்முறை பயிற்சிகள் பெற்று  தற்போது பாபநாசம் சரக காவல் துணை கண்காணிப்பாளராக பணியேற்றுள்ளார்.
அவரை பாபநாசம் சரக காவல் ஆய்வாளர்கள் பாபநாசம் நாகரெத்தினம், அம்மாபேட்டை செங்குட்டுவன், கபிஸ்தலம் ரமேஷ், அய்யம்பேட்டை முருகேசன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உமாபதி, திருவேங்கடம், வேதநாயகி, மோகன்ராஜ், 
முத்துக்குமார் மற்றும் தலைமை காவலர்கள், காவலர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.