பெற்றோர் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றார் பேராவூரணி எம்எல்ஏ மா. கோவிந்தராசு .
பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், நாட்டாணிக்கோட்டை வடக்கு நடுநிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர் பேசியது:
பள்ளிக் கல்விக்கென ரூ. 27 ஆயிரத்து 533 கோடியும், உயர் கல்விக்கென ரூ. 5 ஆயிரம் கோடியும் அரசு சார்பில் செலவிடப்படுகிறது. மாணவர்களுக்கு என 14 வகையான நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் எந்தப் பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் விதமான மன உறுதியோடு தயாராகி, பல துறைகளிலும் முத்திரை பதிக்கின்றனர். எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும் என்றார்.
கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அ. அங்கயற்கண்ணி தலைமை வகித்தார். ஆசிரியர் திருஞானம் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஆர்.பி. ராஜேந்திரன், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் வீராசாமி, எம். சுந்தர்ராஜன், நீலகண்டன், தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், செல்லதுரை, ஆசிரியர் பயிற்றுநர் வேம்பையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னையை சுற்றியிருக்கும் முக்கிய கோயில்கள்
குழந்தைகள் உணவில் எலி விஷம்! விற்ற பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

