மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

கேட்கீப்பர் மீது தாக்குதல்: மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி ரயில் மறியல்

தஞ்சாவூர் அரு கே ரயில்வே கேட் மீதான தாக்குதலை தொடர்ந்து,  மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி

Updated On :8 அக்டோபர் 2018, 8:49 am IST

தஞ்சாவூர் அரு கே ரயில்வே கேட் மீதான தாக்குதலை தொடர்ந்து,  மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தஞ்சாவூரை அடுத்த வண்ணாரப்பேட்டையில் ரயில்வே கேட் உள்ளது. சனிக்கிழமை இரவு இந்த ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த அர்ஜூன்மீனா என்பவருக்கும்,  அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு  நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது,  அந்த நபர்கள் கேட் கீப்பர் அர்ஜூன் மீனாவைத் தாக்கிவிட்டு, தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அர்ஜூன்மீனா அளித்த புகாரின்பேரில் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.  
இந்நிலையில்,  ரயில்வே உயரதிகாரிகளின் உத்தரவின்படி, வண்ணாரப்பேட்டையில் உள்ள ரயில்வே கேட் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மூடப்பட்டது. இதனால் வண்ணரப்பேட்டைக்கு வர வேண்டிய பேருந்து வரவில்லை. மேலும், வண்ணாரப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள்,  வாகனங்களில் தங்கள் விவசாய நிலங்களுக்கும், வீடுகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பலர் சுமார் 8 கி.மீ. சுற்றி செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இதையறிந்த பொதுமக்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் தலைமையில் வண்ணாரப்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் திரண்டனர். தொடர்ந்து, கேட்டைத் திறக்கும்படி வலியுறுத்தினர். ஆனால், ரயில்வே கேட்டை ஊழியர்கள் திறக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த வழியாக வந்த ஜனசதாப்தி ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே போலீஸாரும், வல்லம் போலீஸாரும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதன் பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
ஆனாலும், ரயில்வே கேட் திறக்கப்படவில்லை.  இதனிடையே,  வண்ணாரப்பேட்டைக்கு வந்த பேருந்து ரயில்வே கேட்டுக்கு  சிறிது தொலைவிலேயே பயணிகளை இறக்கிவிட்டு விட்டு திரும்பிச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.