உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

வள்ளலாரின் அவதார தின திருவிளக்கு பூஜை

திருஅருட்பிரகாச வள்ளலாரின் 196 ஆவது அவதார தின விழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Updated On :8 அக்டோபர் 2018, 8:50 am IST

திருஅருட்பிரகாச வள்ளலாரின் 196 ஆவது அவதார தின விழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சாவூர் வங்கி ஊழியர் காலனியில் உள்ள அகத்தியர் ஆலயத்தில் வள்ளலாரின் அவதார தின விழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை ஸ்டாண்டார்டு சார்ட்டட் வங்கியின் துணைத் தலைவர் சுனிதா சுப்பிரமணியன் தலைமையில் மன உருக்கமும், கடவுள் வழிபாடும் என்ற தலைப்பில் பேராசிரியர் ஜெ. மகேசனின் சிறப்பு சொற்பொழிவும், வள்ளலார் காட்டும் வாழ்வியல் அறம் என்ற தலைப்பில் பேராசிரியர் பி. ராஜேந்திரனின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது.தொடர்ந்து ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. 
இதையடுத்து மாலையில் வள்ளலாரின் அருள் வேண்டி சிறப்பு பூஜைகளுடன், சிறப்பு ஜோதி தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.  இதில் ஏராளமான பெண்கள், ஆண்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.