பணியின் போது உயிர்நீத்த சீருடை பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பணியின்போது உயிர்நீத்த போலீஸ் உள்ளிட்ட சீருடைப் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக். 21 ஆம் தேதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறும். அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் பணியின்போது உயிர்நீத்த சீருடை பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. அங்குள்ள நினைவு ஸ்தூபிக்கு தஞ்சாவூர் சரக டிஐஜி லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து 16 காவலர்கள் வரிசையாக நின்று 3 சுற்றுகள் வீதம் 48 குண்டுகளை முழங்கி அஞ்சலி செலுத்தினர். இதில் ஏடிஎஸ்பிக்கள் ரவிசேகர், பாலசந்திரன், ஸ்டாலின், டிஎஸ்பிக்கள் முருகேசன்(ஆயுதப்படை), ரவிசந்திரன் (நகரம்), ஜெயச்சந்திரன்(வல்லம்), காவலர்களின் குடும்பத்தினர், உயிர்நீத்த சீருடை பணியாளர்களின் வாரிசுகள், என்சிசி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20,400 மெட்ரிக் டன் எல்பிஜிக்களுடன் இந்தியா வந்தடைந்த ஜக் விக்ரம் கப்பல்!

பாட்ஷா பட இயக்குநரின் சாருகேசி படத்தில் ரம்யா பாண்டியன்!

விஜய் அதிமுக, பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறாா்: திருமாவளவன் குற்றச்சாட்டு
ஐபிஎல்: கொல்கத்தா கேப்டன் ரஹானேவுக்கு அபராதம்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

